பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு – புதிய டிஜிபி சைலேந்திரபாபு!
தமிழகத்தில் 30வது சட்ட ஒழுங்கு டிஜிபியாக இன்று பதவி ஏற்றுள்ள சைலேந்திரபாபு அவர்கள் முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
டிஜிபி சைலேந்திரபாபு:
தமிழகத்தின் 29 வது சட்ட ஒழுங்கு டிஜிபியாக திரிபாரதி அவர்கள் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 2019 ஜூன் மாதத்தில் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு 2 ஆண்டுகள் பணிக்காலம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தின் 30வது சட்ட ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது பணிக்காலம் 2022 உடன் முடிவுக்கு வரும் நிலையில் அரசு 2023 ஜூன் வரை நீட்டித்து உத்தரவிட்டது.
ஜூலை 2 முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி!
இதை தொடர்ந்து தற்போது புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் பதவியேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. தற்போது பதவியேற்ற பின் பேசிய சைலேந்திரபாபு அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதவி ஏற்றத்தில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது – அமைச்சர் விளக்கம்!
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு காவல்துறை தலைவராக பணியாற்றுவது ஓர் அரிய சந்தர்ப்பம். காவல்துறையினர் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதற்கும் மனித உரிமைகளை மதித்து நடத்தப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படும். காவலர்களின் குறைகளையும் கேட்டு அதை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.