தமிழகத்தில் இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கோயில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கோவில் இடங்கள்:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி திமுக ஆட்சிக்கு வந்ததும் முதற்கட்டமாக இந்து அறநிலைத்துறைக்கு கீழ் உள்ள கோவில்களின் சொத்து மதிப்புகளை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான ரூ.520 கோடி மதிப்பிற்கு மேலான 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
இந்நிலையில் அரசிற்கு சொந்தமான பல நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், திமுக பதவியேற்று 55 நாள்களில் தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 520 கோடி மதிப்பிற்கு மேலான 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் DA உயர்வு – பொதுச்செயலாளர் தகவல்!
மேலும் கோவில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருப்பவர்களுக்கு எந்த காரணத்திற்காகவும் பட்டா வழங்கப்பட மாட்டாது. பழைய ஆட்சியில் பல கோவில் இடங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.