ஜூலை 2 முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி!
கர்நாடகாவில் வரும் ஜூலை 2 ஆம் தேதி முதல் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
வார இறுதி ஊரடங்கு
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால் கர்நாடகா முழுவதும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து அரசு தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் வார நாட்களில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள், வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட உள்ள ஊரடங்கு காலத்தில் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜூலை மாதம் 2 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் வார இறுதி முழு ஊரடங்கானது வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள் கிழமை அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது – அமைச்சர் விளக்கம்!
முன்னதாக கர்நாடகாவில் ஜூன் 21 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து மாநில அரசு தளர்வுகளை அறிவித்திருந்தது. எனினும், அத்தியாவசிய மற்றும் அவசர நடவடிக்கைகளைத் தவிர்த்து பிற தனிநபர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தொற்று பரவுவதைத் தடுக்க, வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த காலத்தில் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன், விலங்கு தீவனம் மற்றும் பால் கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படும்.
தமிழகத்தில் அரசு பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
இந்த கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் உணவகங்கள் வீட்டு விநியோகத்திற்கும் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இதற்கிடையில், பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமான பயணங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் குறைந்த அளவு பேருந்து சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே அறிவித்தது போல, திருமணங்களில் 40 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். எனினும் நோயாளிகள் மற்றும் உதவியாளர்கள், அவசர தேவைக்காக மட்டுமே சரியான ஆதாரத்துடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.