தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது – அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் தற்போது மின் துறை சார்பில் நடத்தப்பட்ட பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவு பெற்ற நிலையில் தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் உறுதி அளித்துள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் சுமார் 10 மாத காலமாக மின்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்தும், அபாயகரமான நிலையிலும் இருந்து வந்தது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மின்தடையும் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்.
தமிழகத்தில் PGTRB தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம்? அரசுக்கு கோரிக்கை!
அதன்படி தமிழகத்தில் கடந்த 19ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு மின்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அவர்கள் அறிவித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மிக தீவிரமாக மின்துறையின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது என்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே இனி நடைபெறும் என்றும் தமிழகம் முழுவதும் மின்வெட்டு என பொத்தம் பொதுவாக புகார் கூறக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.