மதுரை டூ துபாய் சர்வதேச விமான சேவை – ஜூலை 1 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் மதுரை மாவட்டத்திலிருந்து துபாய் செல்லும் விமான சேவை ஜூலை 1 முதல் மீண்டும் தொடங்கவுள்ளது என விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மதுரை – துபாய் விமான சேவை:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கின் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் கொரோனா அச்சத்தால் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இரண்டாம் அலை கொரோனா பரவல் முதல் அலையை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.
Whats App இல் மறைந்திருக்கும் அம்சங்கள் – தவறாமல் படிங்க!
இந்தியாவில் தான் அதிகமான பாதிப்புகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மற்ற நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்தது. சரக்கு விமானங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவும் மற்ற நாட்டு விமானங்களை அனுமதிக்கவில்லை. ஊரடங்கு அமலில் இருப்பதால் தொடர்ந்து தடையை நீட்டித்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல வெளிநாட்டு பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Whats App வழி தகவல்!
தற்போது தொடர் ஊரடங்கின் காரணமாகவும் தடுப்பூசிகளின் விளைவாகவும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகளின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட விமான சேவை தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே கொரோனா காரணமாக ரத்து செய்த மதுரை- துபாய் செல்லக்கூடிய பயணிகள் விமான சேவை வரும் ஜூலை 1 முதல் மீண்டும் தொடங்கவுள்ளது என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.