தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – இணை இயக்குனர் சுற்றறிக்கை!
தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலமாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது தொடங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு ஆசிரியர்கள், பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் சரிபார்க்கும் பணிகள் – துறை இயக்குனர் உத்தரவு!
மேலும் அவர்களது வழக்குகள் தள்ளுபடி செய்ய கடந்த ஆட்சியில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள், நிருவாக மாறுதல், பதவி உயர்வு நிறுத்தி வைத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அவற்றை கைவிட்டு ஆணை வழங்கிய விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிட்டு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப அனைத்து அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த சுற்றறிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
எந்த நடவடிக்கையும் பயன் இல்லை என்று தான் கூற வேண்டும்.