தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் சரிபார்க்கும் பணிகள் – துறை இயக்குனர் உத்தரவு!
தமிழகத்தில் 2020-2021ம் கல்வி ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்களை சரிபார்க்கும் மற்றும் திருத்தும் பணிகள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மதிப்பெண்கள் சரிபார்ப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த கல்வியாண்டு முழுவதும் நேரடி வகுப்புகள் ஏதும் நடைபெறவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி டிவி வாயிலாக மட்டும் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இடையில் கொரோனா பாதிப்பு குறைந்த இரண்டு மாதங்கள் மட்டும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாற்று முறையில் வகுப்புகள் நடந்தது. மீண்டும் தொற்றின் தாக்கம் உச்சத்தை அடைந்த நிலையில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ரீசார்ஜ் கூப்பன், புடவை பரிசு!
இந்நிலையில் மாணவர்களுக்கு மே மாதத்தில் அரசின் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி, தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்றின் தாக்கம் அதிக அளவில் இருந்த காரணத்தால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உட்பட அனைத்து இறுதி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுமுறையில் இருந்து மதிப்பெண்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்காக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை மூலமாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, 2020-2021ம் கல்வி ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவர்களின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை சரிபார்க்கும் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை அரசின் வலைத்தளமான www.dge.tn.gov.in ல் 25.06.2021 முற்பகல் முதல் 30.06.2021 வரை தொடரலாம். இதன் படி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட துணை கல்வி இயக்குனரும் தவறாமல் இந்த மதிப்பெண்களை அரசிடம் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.