உணவகங்கள், மால்கள் 50% வாடிக்கையாளர்களுடன் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நொய்டா மற்றும் காசியாபாத்தில் உள்ள மால்கள், உணவகங்கள் அனைத்தும் இன்று (ஜூன் 21) திங்கள்கிழமை முதல் வரையறுக்கப்பட்ட திறனுடன் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா 2 ஆம் அலையில் இருந்து மீண்டு வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கடந்த வாரம் முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் நொய்டா நகரத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் 10 என பதிவாகியுள்ள நிலையில், செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 137 ஆக குறைந்துள்ளது. மேலும் காசியாபாத் பகுதியில், கடந்த 24 மணி நேரத்தில், 4 வழக்குகள் மட்டும் பதிவாகியுள்ளது.
இன்று முதல் மதுபான பார்கள் திறக்க அனுமதி – ஊரடங்கு தளர்வுகள் அமல்!
அதனால் இவ்விரு பகுதிகளிலும் சில கூடுதல் தளர்வுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், வார இறுதி ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 50% வாடிக்கையாளர்களை கொண்டு உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். ஷாப்பிங் மால்களின் நுழைவு வாயிலில் ஆக்சிமீட்டர்கள் மற்றும் வெப்ப பரிசோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஒவ்வொரு மால்களிலும் கோவிட் ஹெல்ப் டெஸ்க் அமைக்கப்பட வேண்டும். கடைகள் மற்றும் பொதுவான பகுதிகளில் கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய, மால் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர அனைத்து நிறுவனங்களும் வார நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தொல்பொருள் ஆய்வு பகுதிகளும் வழக்கமான நேரப்படி திறக்க அனுமதிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
தவிர இந்த பகுதிகளில் கொரோனா நெறிமுறைகளை மீறுவதை கண்டுபிடிக்க அதன் நிர்வாகம் மற்றும் காவல்துறைம் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இது தவிர ஒரு மாவட்டத்தில் சராசரியாக 500 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், கொடுக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.