மதிய உணவு திட்டத்திற்கு ஜி.எஸ்.டி விலக்கு – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் ஆரம்ப பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க ஜி.எஸ்.டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதிய உணவு திட்டத்திற்கு ஜி.எஸ்.டி.விலக்கு:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே, தமிழகம் தான் முதன் முதலில் மதிய உணவு திட்டத்தை ஆரம்ப பள்ளிகளில் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு தொடர்ந்து மற்ற மாநிலங்களுக்கும் பரவலாக்கப்பட்டது. இந்த மதிய உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து. தற்போது வரை தொடர்ந்து மதிய உணவு திட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது.
தினசரி கூலித் தொழிலாளர்களுக்கான DA உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!!
கடந்த மாதம் மத்திய அரசின் ஜி.எஸ்.டி பொதுக்கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதில் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜி.எஸ்.டி வரி ரத்து செய்ய வேண்டும். பெருந்தொற்று காலத்தில் மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் சலுகை அளிக்க வேண்டும். மேலும் பல கோரிக்கைகளை மாநில அரசின் நிதி அமைச்சர்கள் ஜி.எஸ்.டி பொது கூட்டத்தில் முன் வைத்தனர். மத்திய மற்றும் மாநில கல்வி வாரியங்கள் நடத்தும் தேர்வுகள் மற்றும் கல்வி நிறுவன சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளின் போது வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து அரசு மானியம் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்று, மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. சேவை வரி கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மதிய உணவு தயாரித்து விநியோகம் செய்யும் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர் . இதையடுத்து கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.