தினசரி கூலித் தொழிலாளர்களுக்கான DA உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 1 முதல் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கான DA உயர்வு வழங்கப்பட உள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி அரசு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக அன்றாடம் தொழில் செய்து வருமானம் ஈட்டும் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி அரசு தினசரி கூலித் தொழிலாளர்களுக்கான DA உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல் – நகர நிர்வாகம் உத்தரவு!
அதன்படி, திறமையற்ற தொழிலாளர்களின் மாத ஊதியம், 15,492 முதல், 15,908 ஆக மாற்றப்பட்டுள்ளது. அரை திறமையான தொழிலாளர்களுக்கு, மாத ஊதியம், 17,069 முதல், 17,537 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்களின் எழுத்தர் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதங்களும் மாற்றப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
அதன்படி மெட்ரிகுலேட் அல்லாத ஊழியர்களுக்கான மாத ஊதியம் ₹ 17,069 முதல், 17,537 ஆகவும், மெட்ரிகுலேட் ஊழியர்களுக்கு, 7 18,797 முதல், 19,291 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பட்டதாரிகள் மற்றும் உயர் கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு, மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விதிகள் அனைத்தும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.