வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல் – நகர நிர்வாகம் உத்தரவு!
கொரோனா தொற்று பரவலை சோதிக்கும் முயற்சியாக புனே நகரத்தில் வார இறுதி ஊரடங்கு உத்தரவை மீண்டும் அமலுக்கு கொண்டு வருவதாக புனே முனிசிபல் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
வார இறுதி ஊரடங்கு:
கொரோனா தொற்று பரவல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் மாவட்டங்களில் உள்ள நிலைமையினை பொருத்து கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது புனே நகரில் கொரோனா பாதிப்புகள் குறைந்து உள்ளது. இருப்பினும் பி.எம்.சி கமிஷனர் விக்ரம் குமார் நேற்று புனேயில் வார இறுதி ஊரடங்கை அமல்படுத்துவதாக உத்தரவிட்டுள்ளார். வார இறுதி ஊரடங்கின் கட்டுப்பாடுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
புதிய வழிகாட்டுதல்கள்:
- இரவு 10 மணிக்கு பிறகு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக செல்வத்தையும், பொதுமக்கள் வெளியில் சுற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அத்தியாவசியமற்ற அனைத்து கடைகளும் வார இறுதி நாட்களில் மூடப்படும்.
- மால்கள், சலூன், அழகு நிலையங்கள், ஸ்பா, ஆரோக்கிய மையங்கள், பார்கள் மற்றும் உணவு விற்பனை கடைகள் செய்யும் அனைத்து திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அத்தியாவசிய கடைகள் அனைத்து நாட்களிலும் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்கள் இரவு 11 மணி வரை வீட்டு விநியோக அல்லது பார்சல் சேவையை வழங்க முடியும். மொத்த இருக்கை திறனில் 50 சதவிகிதத்துடன் வார நாட்களில் இரவு 10 மணி வரை வாடிக்கையாளர் உணவருந்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
- மேலும், ஜூன் 14ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தளர்வுகளையும் தொடருவதற்கு பி.எம்.சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.
- நூலகங்கள், பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதிக்கப்படுகிறது.
- அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களுக்கும், பணிபுரியும் பெண்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் ரயில் சேவை அனுமதிக்கப்படும்.
- பேருந்து சேவைகள் 50 சதவீத இருக்கை நபர்களுடன் அனுமதிக்கப்படும்.
- தோட்டங்கள், திறந்தவெளி மைதானம் உள்ளிட்ட பொது இடங்கள் தினமும் அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
- உள் அரங்கு விளையாட்டுகளுக்கு காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படும்.
- கலாச்சார, சமூக மற்றும் மத நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 பேருடன் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படுகின்றது.