அரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயக்கம் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

0
அரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயக்கம் - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
அரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயக்கம் - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
அரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயக்கம் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருவதால், ஹரியானா மாநிலத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி அரசு அலுவலகங்கள் அனைத்தும் 100% பணியாளர்களுடன் மீண்டுமாக துவங்க உள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

ஹரியானா மாநிலத்தில் நோய் பாதிப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதனால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகளை அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அறிவிக்கப்பட்ட உத்தரவின் படி, மாநில செயலகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களையும், அனைத்து ஊழியர்களுடன் அதாவது 100% பணியாளர்களுடன் மீண்டும் இயங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

மதிய உணவு திட்டத்திற்கு ஜி.எஸ்.டி விலக்கு – மத்திய அரசு அறிவிப்பு!

முன்னதாக அம்மாநிலத்தில் ஜூன் 13 முதல் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பின்பாக ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த பொது முடக்கத்தின் போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி 50 சதவீத ஊழியர்கள் வருகையுடன் கார்ப்பரேட் அலுவலகங்களை திறக்க அரசாங்கம் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தற்போது அளிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி,

  • அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும்.
  • காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் திறந்திருக்கலாம்.
  • 50% இருக்கை வசதிகளுடன் உணவகங்கள் மற்றும் பார்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும்.
  • உணவகங்கள் மற்றும் ஃபாஸ்ட் புட் கடைகளில் வீட்டு விநியோகம் செய்வதற்கு இரவு 10 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • ஒரே நேரத்தில் 21 பேர் மட்டும் கலந்து கொள்ளும் மதவழிபாட்டு தலங்கள் திறக்கப்படும்.
  • கார்ப்பரேட் அலுவலகங்கள் 50 சதவீத வருகையுடன் திறக்கப்படும்.
  • திருமணம், இறுதி சடங்குகளில் 21 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி.
  • 50 சதவீதம் திறனுடன் ஜிம்கள், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.
  • கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், நூலகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!