தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய குழு அமைப்பு – 8 உறுப்பினர்கள் நியமனம்!
தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் அவர்கள் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து ஆய்வு குழுவில் தற்போது 8 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு:
மத்திய அரசினால் ஆண்டிற்கு ஒரு முறை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பல்வேறு மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல தற்கொலைகளும் நடைபெற்று உள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல தரப்பினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய மற்றும் அவர்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தடுப்பு ஏற்பாடுகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
அதற்கான அரசாணை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதனை அடுத்து குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதியரசர் ஆர்.கே. ராஜன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். தற்போது ஆய்வு குழுவில் 8 உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த குழு உரிய புள்ளி விவரங்களை ஆராய்ந்து தமிழகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதுகாக்கும் பரிந்துரைகளை தமிழக அரசுக்கு ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழு உறுப்பினர்கள்:
- டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்
- டாக்டர் ஜவஹர் நேசன்
- அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
- அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை
- அரசு செயலாளர், சட்டத்துறை
- அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்பு பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
- இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம்
- கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர், தேர்வுக் குழு – உறுப்பினர் / செயலர் / ஒருங்கிணைப்பாளர்