தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தடுப்பு ஏற்பாடுகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
தமிழகத்தில் மூன்றாம் அலை உருவானால் அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
கொரோனா மூன்றாம் அலை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் முதல் பரவி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு உருமாறிய கொரோனா வைரஸ் அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் கடந்த வருடத்தை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிகளும் மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
UPSC சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வு – ஆகஸ்ட் 2ம் தேதி தொடக்கம்!
இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை வரும் என பெருந்தொற்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள சேலத்தில் 7 ஆயிரத்து 65 ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 12 ஆயிரத்து 658 படுக்கை வசதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தயார் நிலையில் உள்ளது. மேலும் சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் 500 படுக்கைகள் அமைக்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சேலம் உருக்காலை வளாகத்தில் தற்போது வரை 12,658 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவிற்க்கு முதல்வர் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளார். இன்னும் பல பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 100 சதவீதம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அரசின் இலக்கு. மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அதற்கான பணிகளை செய்துள்ளார் எனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.