12ம் வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக அரசு வழங்கல்!!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வடிவமைத்து ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் அனுப்பியுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
கொரோனா இரண்டாம் அலை பரவல் நாடு முழுவதும் அதிகரித்து பாதிப்பு எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த வருடம் பரவிய கொரோனா வைரஸை விட தற்போது பரவி வைரஸ் அதிக வீரியத்துடன் வேகமாக பரவுகிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று முடிந்தது. மே 5ம் தேதி முதல் 12ம் பொதுத்தேர்வு நடைபெற இருந்த நிலையில் கொரோனா 2ம் அலை காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் பேட்டி!!
இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யலாமா அல்லது முக்கிய பாடங்களுக்கு மட்டும் பொதுத் தேர்வினை நடத்தலாமா என்பது குறித்து மத்திய அரசு அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியது. தமிழக அரசும் தேர்வு நடத்துவது பற்றி கல்வியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. கொரோனா பரவல் நிலையை ஆராய்ந்து தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் கருத்துக்களை அறிக்கையாக அனுப்பி வைக்க மத்திய அரசு கேட்டுக் கொண்ட நிலையில், தமிழக அரசு கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து தேர்வு வழிமுறைகளை வடிவமைத்து முதல்வரின் அனுமதியையும் பெற்றது. அதை மத்திய அரசு உத்தரவின் படி ஒப்புதலுக்காக 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் வழிமுறைகளை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.