தமிழகத்தில் 93 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் 42 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை எதிரொலியாக மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த 4 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. அதனை தொடர்ந்து ரெட் அலர்ட் நீக்கப்பட்டு மீட்பு குழுவினர் பயன்படுத்தப்பட்டு சாலைகளில் தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாதுகாப்பு வசதி! ரூ.16.59 லட்சம் ஒதுக்கீடு!
தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட் விடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று வரை 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் மழைநீர் தேங்கி இருப்பதால் 42 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் தேங்கி உள்ள, நிவாரண முகாமாக மாற்றப்பட்ட 93 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மலிவு விலை ‘வலிமை’ சிமெண்ட் விற்பனை – முதல்வர் தொடங்கி வைப்பு!
தண்ணீர் இல்லாத பள்ளிகள் மற்றும் தற்போது செயல்பட்டு வருகின்றனர். அந்த பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளும், சாலைகள் துண்டிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் மட்டும் இன்று பள்ளிக்கு வரவில்லை எனவும் நாளை அவர்கள் பள்ளிக்கு வந்து விடுவார்கள் என அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.