தமிழக அரசின் மலிவு விலை ‘வலிமை’ சிமெண்ட் விற்பனை – முதல்வர் தொடங்கி வைப்பு!
தமிழ்நாடு சிமெண்ட் கழகம் (டான்செம்) சார்பில் ‘வலிமை’ சிமெண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிமெண்ட் மலிவு விலையில் மக்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
வலிமை சிமெண்ட்:
நாளுக்கு நாள் சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கையை முன்வைத்தனர். அதிகரித்து வந்த சிமெண்ட் விலையானது அரசின் தலையீட்டால் விலை குறைக்கப்பட்டு ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.440 வரை விற்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை (நவ.17) மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அரசின் சார்பில் வலிமை சிமெண்ட் குறைந்த விலையில் நல்ல தரத்தில் மக்களுக்கு விரைவில் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் வலிமை சிமெண்ட் தயாரிக்கப்பட்டு வந்தது. தயாரிப்பு பணிகள் முடிந்த நிலையில் தமிழக முதல்வர் வலிமை சிமெண்ட் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல நவ.20 வரை பக்தர்களுக்கு தடை – ஆட்சியர் உத்தரவு!
இந்த நிகழ்ச்சியானது சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக அரசு சார்பில் வலிமை சிமெண்ட் குறைந்த விலையில் கட்டுமான நிறுவனங்களுக்கு, பொதுமக்களுக்கும் வழங்கப்பட உள்ளதால் வெளி சந்தையில் சிமெண்ட் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.