தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாதுகாப்பு வசதி! ரூ.16.59 லட்சம் ஒதுக்கீடு!
தமிழகத்தில் தொலைதூரம் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு சென்று கல்வி பயிலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதி மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பாதுகாப்பு:
தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி திட்டம் அனைவரும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் பள்ளிகள் நகர்ப்புறங்களில் கட்ட இடவசதி இல்லாததால் மலைப்பாங்கான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு மலை பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
தமிழக அரசின் மலிவு விலை ‘வலிமை’ சிமெண்ட் விற்பனை – முதல்வர் தொடங்கி வைப்பு!
அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் தொலைதூரம் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உதவி செய்யும் வகையில் பள்ளி மேலாண்மை குழு ரூ.16.59 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் வழித்துணை ஏற்பாடு செய்து அவர்களுக்கு நிதி வழங்கும் விதமாக இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையானது ஒரு மாதத்திற்கு ஒரு மாணவனுக்கு ரூ.3000 வீதம் 5 மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (நவ.17) மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த வசதியானது தருமபுரி மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட 7 ஒன்றியங்களில் உள்ள தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிதியானது 553 மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பாதுகாப்பாளர் நியமனம் மேலாண்மை குழுவால் மட்டுமே செய்யப்படும். பாதுகாவலர் அந்த குறிப்பிட்ட மாணவரின் பெற்றோராக இருக்கலாம். 5 மாணவர்களுக்கு 1 பாதுகாவலர் என நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.