தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் கனமழை காரணமாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் 11ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, வடகிழக்கு பருவமழையினால் தான் தமிழகத்தில் இந்த அளவிற்கு தீவிர மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, பாட திட்டம், கட் ஆப் விவரங்கள்!
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 2021 நவம்பர் 11 அதிகாலையில் வட தமிழகக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவில் மேலும் தீவிரமடைய உள்ளது என்று ஐஎம்டி அறிவித்துள்ளது. இதனால் சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கேரளா, கடலோர ஆந்திரா, ராயலசீமா உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் “அதிக கனமழை” பெய்யும் என்று கணித்துள்ளது.
2016 TNPSC குரூப் 4 VAO தேர்வு முறைகேடு – உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி!
கனமழை காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் நவம்பர் 11ஆம் தேதியான நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கனமழை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.