சென்னையில் நீடிக்கும் கனமழை – 8 விமானங்கள் ரத்து! பயணிகள் கவனத்திற்கு!
சென்னையில் பெய்து வரும் கனமழையால் வானிலை மோசமாக உள்ளது. இதனால் மதுரை, திருச்சி போன்ற 4 இடங்களுக்கு செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
விமானங்கள் ரத்து:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், மூடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பேருந்து சேவை, ரயில் சேவை, சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.இவைகளை தொடர்ந்து விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. தொற்று பரவும் இந்த நேரத்தில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும் போது தொற்று விரைவாக பரவ வாய்ப்புள்ளது என்று பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – கனமழை எதிரொலி!
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவியதால் உலக நாடுகள் அனைத்தும் இந்திய பயணிகள் விமானத்தை ரத்து செய்தது. அதே போல இந்தியாவும் பிற நாட்டு விமானங்களுக்கு தடையை அறிவித்தது. மேலும் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம் கோரா தாண்டவம் ஆடியதால் உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அரசின் முயற்சியால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து பயணிகள் வசதிக்காக ரத்து செய்யப்பட்ட விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – 96 நாடுகள் அங்கீகாரம்!
இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட இருந்த 4 விமானங்களும், சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்கள் உட்பட 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.