இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – 96 நாடுகள் அங்கீகாரம்!

0
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - 96 நாடுகள் அங்கீகாரம்!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - 96 நாடுகள் அங்கீகாரம்!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – 96 நாடுகள் அங்கீகாரம்!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டில் இருந்து வரும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி சான்றிதழை சர்வதேச பயணத்தின் போது ஏற்றுக்கொள்வதாக 96 உலக நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது.

தடுப்பூசி சான்றிதழ்

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது தவிர ஒரு சில தனியார் மருத்துவமனைகள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையும் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

அந்த வகையில் நாடு முழுவதும் இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிலும் தமிழகம் போன்ற சில மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருவதால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கிட்டத்தட்ட 18 மாதங்கள் கழித்து மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன.

இப்போது இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டில் இருந்து வரும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி சான்றிதழுக்கு சுமார் 96 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘மக்கள் கல்வி, வணிகம், சுற்றுலா போன்ற பல்வேறு காரணங்களுக்காக நாடு விட்டு நாடு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால் ஒவ்வொரு விமான பயணத்தின் போதும் தடுப்பூசி சான்றிதழ் என்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்தியாவில் செலுத்தப்படும் தடுப்பூசிகளில் இரு டோஸ் அளவு எடுத்துக்கொண்ட சான்றிதழை ஏற்பது குறித்து உலக நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் இந்தியாவில் போடப்படும் தடுப்பூசி சான்றிதழை 96 நாடுகள் ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இப்போது சர்வதேச பயணதிற்காக இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை ஒப்புக்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், கஜகஸ்தான், ரஷ்யா, இலங்கை, மாலத்தீவுகள், பிரேசில், அர்ஜென்டினா, நேபாளம், குவைத், கொலம்பியா, ஈரான், கத்தார், பாலஸ்தீனம் உள்ளிட்ட 96 நாடுகள் இடம்பெற்றுள்ளது. இத்தகையை தடுப்பூசி சான்றிதழை கோவின் இணையதளம் மூலம் பயணிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!