தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ்!

0
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ்!
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ்!
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ்!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு விடுமுறை அளிக்கப்படும். நடப்பாண்டில் அரையாண்டு தேர்வு இல்லாதலால் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9 நாட்கள் விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா காரணமாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. அத்துடன் நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் டிச.18 வரை மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை – வானிலை அறிக்கை!

அதனால் பொதுத்தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவத்தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற டிசம்பர் 17 முதல் 24 ஆம் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வு நடைபெறயுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு விடுமுறை அளிக்கப்படும். தற்பொழுது முதல் தேர்வு முடிந்த பின் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடுவதற்கு 9 நாட்கள் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் 41,177 காலிப்பணியிடங்கள் – மத்திய நிதியமைச்சர் விளக்கம்!

இதனை தொடர்ந்து ஜனவரி 3 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழக்கம் போல் தினமும் நேரடி வகுப்புகள் நடைபெறும். மேலும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பு மாணவர்கள் குறித்து எந்த அறிவிப்பும் அரசு வெளியிடவில்லை. ஆனால் இவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!