தமிழகத்தில் டிச.18 வரை மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை – வானிலை அறிக்கை!
வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 16ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு மழைப்பொழிவு அதிகமாகவே இருந்தது . இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் 41,177 காலிப்பணியிடங்கள் – மத்திய நிதியமைச்சர் விளக்கம்!
மேலும் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. தலைநகர் சென்னையில் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவ மழையால் வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டது. பிறகு படிப்படியாக மழையும் குறைந்தது. ஆனாலும் தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. தினசரி வானிலை தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்றைய வானிலை அறிக்கையை பின்வருமாறு,
12.12.2021, 13.12.2021, 14.12.2021: கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
15.12.2021, 16.12.2021: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் டிச.19 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
14.12.2011 முதல் 18.12.2021 வரை: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பபகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.