தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை – மாணவர்கள் மகிழ்ச்சி!

0
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை - மாணவர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை - மாணவர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை – மாணவர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறையாக 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விடுமுறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

அரையாண்டு விடுமுறை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதாவது கடந்த நவம்பர் மாதம் தான் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் காலம் கடந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. ஏனெனில் தேர்வுக்கு உரிய பாடங்கள் இன்னும் நடத்தி முடிக்கவில்லை என்பதே உண்மை.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தரம் குறித்த ஆய்வு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் மாணவர்களின் கற்றல் நிலையை மதிப்பிட்டு அறிந்து கொள்ளும் வகையில் தேர்வுகள் நடத்த அரசு முடிவு செய்தது. அதனால் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு முன்னர் ஒரு தேர்வுகள் நடத்தும் வகையில் திருப்புதல் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த திருப்புதல் தேர்வானது அரையாண்டு தேர்வுக்கு பதிலாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திருப்புதல் தேர்வானது கடந்த டிச.20ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே திருப்புதல் தேர்வு அரையாண்டு தேர்வு போல் நடைபெறுவதால் விடுமுறை வழங்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வந்தது.

தமிழகத்தில் டிச.27ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டு விடுமுறை நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வருவதால் இந்தாண்டும் விடுமுறை வழங்குமாறு ஆசிரியர்களும் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை 27.12.2021 முதல் 31.12.2021 வரை 5 நாட்கள் அரையாண்டு விடுமுறையாக அறிவித்துள்ளது. இதற்கு இடையில் சனிக்கிழமைகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வருவதாலும், அடுத்து ஞாயிறு வழக்கமான விடுமுறை என்பதால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் ஜன.3ம் தேதி வழக்கம் போல பள்ளிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!