தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தரம் குறித்த ஆய்வு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் தரம், பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிகளின் தரம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளுக்கு பின் தற்போது சில மாதங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் இறந்த செய்தி தமிழக மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார்.
TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – தமிழ்மொழித்தேர்வு கட்டாயம்!
அதனை தொடர்ந்து தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்லையில் நடைபெறும் பள்ளி, கல்வி நிலையங்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் ஆலோனை கூட்டம் நெல்லையில் வைத்து இன்று நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் டிச.27ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அனைத்து பள்ளிகளும் நவ.1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி விட்டு அமர்வது போன்றவற்றை கண்காணிப்பதுடன் இதனை மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் சேதமடைந்த பள்ளிகளில் மாணவர்களை அமர வைக்கக் கூடாது எனவும் பள்ளிகளில் இத்தனை நாட்களாக பயன்பாட்டில் இல்லாத மின்சாதனங்களை சோதனை செய்ய வேண்டும் எனவும், கல்வி நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் பள்ளி சுவர் இடிந்து விழுவது போல எந்த சம்பவங்களும் நடைபெற கூடாது அதனால் பள்ளிகள் தரம் குறித்து முழு அறிக்கை இந்த மாத இறுதிக்குள் வரும் என அவர் தெரிவித்துள்ளார்.