தமிழகத்தில் டிச.27ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் டிச.27ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.27ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.27ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக காரைக்குடி உள்ள புதுவயல் பகுதியில் வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி அன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. ஆதலால் தமிழக அரசு இவ்வாறு விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை முறையாக மாதந்தோறும் மேற்கொள்கிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்படுவது குறைகிறது. அதனால் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின் தடையை பல்வேறு பகுதிகளில் அறிவித்து வருகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – தேங்காய் எண்ணெய் விநியோகம்! முக்கிய கோரிக்கை!

இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அறிவித்த பின் அந்த பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து காரைக்குடி அருகே புதுவயல் பகுதியில் சாக்கவயல் துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி சாக்கவயல் துணை மின்நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் மின் பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்த மின் பராமரிப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு? ஆலோசனையில் வெளியான முக்கிய தகவல்!

மேலும் சாக்கவயல் துணை மின்நிலையத்தால் மின்சாரம் பெறும் பகுதிகளான புதுவயல், கண்டனூா், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீா்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளர் பி. ஜான்சன் அவர்கள் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!