8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவியது. முதல் மற்றும் இரண்டாம் அலை என கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. தற்போது 3வது அலை அச்சம் நிலவுகிறது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இன்று முதல் கலந்தாய்வு!
ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் செப்.1ம் தேதி 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு பள்ளிகள் இயங்கி வந்தது. இருப்பினும் சில பகுதிகளில் மாணவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரிப்பு – இன்றைய விற்பனை!
தற்போது கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று வேகமெடுத்து உள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் திருப்பூரில் உள்ள 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்க மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.