சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரிப்பு – இன்றைய விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய விற்பனையில் மீண்டுமாக உயர்வை கண்டுள்ள நிலையில் ஒரு சவரன் நகை ரூ.256 அதிகரித்து சவரனுக்கு ரூ.35,728 என இன்று (செப்டம்பர் 15) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் ஆச்சரியமளிக்கும் விதமாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதுவும் தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு தங்க நகைகளின் விற்பனையானது வீழ்ச்சியை சந்தித்து வந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த 8 நாட்களாக தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டு சவரனுக்கு ரூ.35,500 என விற்பனையானது.
பத்ம விருதுகள் 2022 விண்ணப்பங்கள் வரவேற்பு – இன்றே கடைசி நாள்!
அதனால் நகைப்பிரியர்கள் ஆர்வமுடன் நகைகளை வாங்கி சென்றனர். அது போல விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. ஊரடங்கு காலத்திற்கு பிறகு தங்க நகைகளின் விலை இப்படி அதிரடி வீழ்ச்சியை சந்தித்தது நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக அமைந்தது. இப்படி தொடர் சரிவை கண்டு வந்த தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 15) விலை உயர்வை அடைந்துள்ளது.
செப்.30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – கொரோனா 3ம் அலை எதிரொலி!
அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் நகை ரூ.35,728க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,466க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளியின் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் ரூ.67.70க்கு விற்பனையாகிறது.