தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இன்று முதல் கலந்தாய்வு!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வு செப்டம்பர் 24ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொறியியல் கலந்தாய்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் நடைபெறவிருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் பேரில் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. கலை கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் படைப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. 2021 – 2022ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையானது ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரிப்பு – இன்றைய விற்பனை!
ஆகஸ்ட் 24ம் தேதியுடன் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்தது. அதன் பிறகு கடந்த 13ம் தேதி ஒற்றை சாளர ஆன்லைன் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெறும் மாணவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ‘கட் ஆப்’ மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு அவர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று http://tneaonline.org என்கிற இணைய பக்கத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் தரவரிசை பட்டியல் போன்றவை வெளியிடப்பட்டது.
பத்ம விருதுகள் 2022 விண்ணப்பங்கள் வரவேற்பு – இன்றே கடைசி நாள்!
அதனை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் கட்டமாக சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று முதல் செப்டம்பர் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது.