மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 4% அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அந்த வகையில், 2023ம் ஆண்டு தொடங்கியதை தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4% ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்படி உயத்தப்பட்டால் ஊழியர்களுக்கு கிடைக்கும் சம்பளம் குறித்த விவரத்தை விரிவாக பார்ப்போம்.
அகவிலைப்படி
பொதுவாக அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் பண வீக்கத்தை எதிர்கொள்ள ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் 01.07.2022 அன்று முதல் தற்போது வரை 38 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 2023ம் ஆண்டு தொடங்கியதை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைக்கும் ஷாக்.. சாமானியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தங்கம்.. சவரன் ரூ.43,000ஐ நெருங்கும் அபாயம்!
அதன்படி, இம்முறை 4% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு 4% அகவிலைப்படி உயர்வு பெற்றால் மத்திய அரசு ஊழியர்கள் 42% அகவிலைப்படி பெறுவார்கள். தற்போது ஊழியர் ஒருவர் மாத சம்பளமாக ரூ.18000 பெறுகிறார் எனில் 38% அகவிலைப்படியின் படி மாதம் ரூ.6,840 கிடைக்கும். இதே போல் 42% அகவிலைப்படி கணக்கீடு செய்தால் ரூ.720 உயர்ந்து, ரூ.7,560 அகவிலைப்படி தொகையை பெறுவார்.
இதே போல் 9ம் நிலையில் உள்ள ஒரு ஊழியருக்கு, மாதாந்திர அடிப்படைச் சம்பளமாக ரூ.53,100 பெறுகிறார் எனில், 38% அகவிலைப்படி அடிப்படையில் ரூ.20,178 கிடைக்கும். அத்துடன் 42% அகவிலைப்படி பெற்றால் அவருக்கு அகவிலைப்படி தொகையாக ரூ.22,302 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.