அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு – 7வது ஊதிய கமிஷன் பரிந்துரை!

0
அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு - 7வது ஊதிய கமிஷன் பரிந்துரை!
அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு - 7வது ஊதிய கமிஷன் பரிந்துரை!
அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு – 7வது ஊதிய கமிஷன் பரிந்துரை!

ஹிமாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கு முன்னதாக 28% ஆக இருந்த அகவிலைப்படியானது தற்போது மேலும் 3% அதிகரிக்கப்பட்டு மொத்தம் 31% ஆக வழங்கப்படவுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கடந்த தவணை வரை வழங்கியுள்ளது. தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் 31% DA பெற்று வருகின்றனர். தற்போதைய நடப்பு தவணையான 2022 ஜனவரி 1க்கான DA உயர்வு அளிப்பது பற்றி அரசு தற்போது ஆலோசித்து வருகிறது. புதிய DA உயர்வானது 3% அளிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் பணபலன்கள் அனைத்தும் அதிகரிக்கும். ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்த்தப்படும். மொத்தம் 34% DA ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – சம்பளத்துடன் விடுமுறை!

7வது மத்திய ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களின் டிஏ அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. டிசம்பர் 2021க்குள் CPIIW எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் மூன்று சதவீதம் வரை அதிகரிக்கலாம். தற்போது, மொத்த அகவிலைப்படி (DA) 31 சதவீதமாக உள்ளது, இது 34 சதவீதமாக அதிகரிக்கலாம். 3 சதவீதம் உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.20,000 வரை உயரும். மத்திய அரசை போலவே மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை செலுத்தி வருகிறது.

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் தொடக்கம்!

சமீபத்தில், இமாச்சல பிரதேச மாநில அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. 31 சதவீத அகவிலைப்படியை அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவித்துள்ளார். முன்னதாக, ஊழியர்களுக்கு 28 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. ஊழியர்களுக்கு 3 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படும் என முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவித்துள்ளார். இதனால் அரசு கருவூலத்துக்கு ரூ.500 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்றும், இது தவிர, மாநில அரசு நலத்திட்டங்கள் மற்றும் ஓய்வூதியத்தைப் பயன்படுத்த ஆண்டு வருமான வரம்பை 35,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!