TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் தொடக்கம்!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நடுப்பு ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்வு இன்று முதல் தொடங்கி பிப்.20 வரை நடக்கிறது. அந்த வகையில் தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு இன்று முதல் தொடக்கம்:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். அந்த வகையில் நடப்பு ஆண்டு முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1க்கான தேர்வுகள் இணைய வழியாக கணினிகள் மூலம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
நாளை (பிப்.13) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமல்? மாநில அரசு விளக்கம்!
இந்த அடிப்படையில் இந்த தேர்வுகள் காலை 9 மணி பிற்பகல் 2 மணி வரை, காலை மற்றும் மாலை இரு வேளைகளில், இன்று முதல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. தேர்வர்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது.
2. தேர்வர்கள் தேர்வு நுழைவுச்சீட்டுடன். போட்டோ மற்றும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட் கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை இணையும் கொண்டு வர வேண்டும்.
3.தேர்வுக் கூடத்திற்குள் செல்போன், மைக்ரோ போன், கால்குலேட்டர், லாக் டேபிள், பேஜர், டிஜிட்டல் டைரி, புத்தகம் போன்ற பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது.
மேலும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் தேர்வு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது , போதுமான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருவாய்துறை அதிகாரிகள், தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை நேரடியாக பார்வையிட உள்ளார்.