தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – சம்பளத்துடன் விடுமுறை!
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்கு விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
விடுப்பு:
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி அன்று 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள் 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கி விட்டதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனையடுத்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் தொடக்கம்!
கடந்த 7ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணி அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாக செயல்படவுள்ளதால் பள்ளிகளுக்கு பிப்ரவரி 19 முதல் 22 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 19ம் தேதி தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை (பிப்.13) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமல்? மாநில அரசு விளக்கம்!
வாக்களிக்க செல்லும் ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் அன்றய தினத்திற்குரிய ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது. விடுப்பிற்கு சம்பள பிடித்தமோ, சம்பளக் குறைப்போ செய்ய கூடாது. ஊதியத்துடன் பிப்ரவரி 19ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும். அரசின் இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.