தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் தொடக்கம்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தற்போது 60க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அறிவிப்பு ஒன்றை சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதிய மருத்துவமனை:
தமிழகத்தில் தற்போதைய அரசு மக்களுக்கு பயனளிக்கும் விதமாக பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதால் நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா காலத்தில் நலிவடைந்த பொருளாதார வளர்ச்சி தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. இதை தவிர வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் வருவாய் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் உயர தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போதைய ஆளும் அரசு தேர்தல் வாக்குறுதியாக பல நல்ல திட்டங்களை அறிவித்திருந்தது. இந்த நிலையில் 50% திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு பயனளித்து வருகிறது. குறிப்பாக இல்லம் தேடி கல்விதிட்டம், வீடு தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க சில தனியார் நிறுவனங்களுக்கு கடன் உதவி அளித்து, வேலைவாய்ப்பினை அதிகரித்து வருகிறது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் இனி தரக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை முடிவு!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தமிழகத்தில் புதிதாக 79 மருத்துவமனைகள் கட்ட முதல்வர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். தற்போது 60க்கும் மேற்பட்ட இடங்களில் பணி நிறைவு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த திட்டமானது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு மருத்துவம் எளிய முறையில் கிடைக்க வேண்டும் என்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் 79 மருத்துவமனைகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.