தமிழக பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் இனி தரக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை முடிவு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இனி வீட்டுப்பாடம் ( Home Work) தரக்கூடாது என்றும், அதனை முறையாக அனைத்து பள்ளிகளும் நடைமுறை படுத்துகிறதா என்றும் பறக்கும் படையை கொண்டு உறுதி செய்யப்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீட்டுப்பாடம் இனி இல்லை:
டிஜிட்டல் உலகத்தில் இருக்கும் இன்றைய தலைமுறையினர் பள்ளிக்கூடத்தில் கரும்பலகை என்ற சுவடு மாரி ஸ்மார்ட் போர்டு வகுப்பிலும், பாட புத்தகங்களை பார்த்து படிப்பதை தாண்டி அனைத்தையும் உள்ளடக்கிய ஸ்மார்ட் போனிலும் காலம் நகர்கிறது. இந்த முறையானது சமீப காலத்தில் தான் அதிகளவு நடைமுறையில் இருந்து, தற்போது வழக்கமாகவே தொடர்ந்து வருகிறது. ஏனெனில் கொரோனா காலகட்டத்தில் உலகில் பல இழப்புகள் ஏற்பட்டதில் முக்கியமான ஒன்று கற்றல் இழப்பு.
கடந்த 2 வருட காலமாக பரவி வந்த கொரோனாவால் மாணவர்களும் பள்ளிக்கு சென்று நேரடி வகுப்புகளில் பாடம் கற்க முடியவில்லை. அந்த சமயம் தான் இந்த ஸ்மார்ட்போன் வழிமுறை நடைமுறைப்படுத்த பட்டது. இதன் மூலமாக தான் மாணவர்களும் ‘ஆன்லைன் வழி கல்வி’ என்ற முறையில் பாடங்களை கற்றும், தேர்வினை எழுதியும் வந்தனர். அதன் பிறகு நடப்பு ஆண்டில் ஓரளவு கொரோனா தாக்கம் கட்டுக்குள் வர தொடங்கியதை அடுத்து அனைத்து பள்ளிகளும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டு திறக்கப்பட்டது.
வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் 8 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதனால் மாணவர்களும் பள்ளிக்கு ஆர்வமாக சென்று வருகின்றனர். இப்படி இருக்கையில் அரசானது கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கல்விக்காக செயல்படுத்திய சில சலுகைகளையும் ஒவ்வொன்றாக தளர்த்தி வருகிறது. இந்நிலையில் 1 மற்றும் 2 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work) தரக்கூடாது என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பள்ளிகளில் பறக்கும் படையை கொண்டு ஆய்வு செய்து அம்மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.