தமிழக அரசு சார்பில் ரூ.750 உதவித்தொகையுடன் ITI மாணவர் சேர்க்கை – செப்.15 கடைசி நாள்!
கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதற்கு செப்டம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடிஐ மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் ஏராளமான மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு சிறந்த வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் 10ம் வகுப்பு முடித்த உடனே தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை பெறுகின்றனர். தற்போது கோவை அரசு மகளிர் ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு எதிரில் மகளிருக்கான தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு!
இங்கு பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோ மீட்டர் தொலைவு வரை இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் கடந்த ஆண்டு இங்கு பயிற்சி பெற்றவர்களில் 71 % பேருக்கு உடனடியாக வேலை கிடைத்துள்ளது. டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆப்பரேட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டென்ட், பேஷன் டிசைன் டெக்னாலஜி, ஆகிய 1 ஆண்டு பயிற்சியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத கொரோனா தடுப்பூசி கட்டாயம் – ஆளுநர் அறிவிப்பு!
இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஃபர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி போன்ற 2 ஆண்டு கால பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கோவை தொழிற்பயிற்சி நிலையத்தில் 90% மகளிர் பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட படிப்புகளில் சேர செப்டம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தினமும் காலை 10 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9499055692, 9865128182, 9443429953 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கோவை ஐடிஐ முதல்வர் தெரிவித்துள்ளார்.