மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் இளைஞர்கள் அரசு வேலை பெறுவதற்காக பயிற்சி வகுப்புகள் சென்று வருகின்றனர். தற்போது கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அரசு வேலைவாய்ப்பு:
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெறுவதை இலக்காக வைத்து இளைஞர்கள் பயிற்சி வகுப்பு சென்று வருகின்றனர். தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வின் மூலம் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசுப்பணி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய & மாநில அரசு வேலை மற்றும் வங்கிகளில் வேலை என பல இருக்கும் பட்சத்தில் இளைஞர்கள் பயிற்சி வகுப்பு மூலம் தங்களை தயார் செய்து வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத கொரோனா தடுப்பூசி கட்டாயம் – ஆளுநர் அறிவிப்பு!
பல மாவட்டங்களில் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடலூரில் செப்டம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கியது.
இரவு ஊரடங்கில் மேலும் ஒரு மணி நேரம் தளர்வு – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு!
செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்கப்பட்ட வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் நேரடியாக கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து, வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.