கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத கொரோனா தடுப்பூசி கட்டாயம் – ஆளுநர் அறிவிப்பு!
புதுச்சேரி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பு தான் அவர்களுக்கு தேர்விற்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக்கல்லூரியில் இன்று கொரோனா நினைவு தோட்டம் மற்றும் திறந்தவெளி வகுப்பறையினை புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தொடங்கி வைத்தார். பின்னர், அவருக்கு முதல்வர் கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களை பற்றி விளக்கினார். அதன் பின்னர் ஆளுநர் அவர்கள் மாணவர்கள் மத்தியில் பேசும் போது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அனைவரையும் வலியுறுத்தினார். லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரி மாணவர்கள் 70 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்று கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்தார்.
மாநில அரசு ஊழியர்கள் & ஓய்வூதியர்களுக்கு 11% DA உயர்வு – அரசு அறிவிப்பு!
மேலும் அவர் பேசும் போது, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது இன்று முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 70 சதவீத மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. அது 100 சதவீதமாக உயர வேண்டும். கொரோனா 3வது அலையினை தடுக்க தடுப்பூசி செலுத்தி கொள்வது தான் ஒரே தீர்வு. மாணவர்கள் தான் தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இரவு ஊரடங்கில் மேலும் ஒரு மணி நேரம் தளர்வு – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு!
மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டால் தான் தேர்விற்கு ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்ற திட்டத்தினை கொண்டு வரலாம். இப்படி அனைவரையும் தடுப்பூசி செலுத்தி கொள்ள கட்டாயப்படுத்துவது வருத்தமளிக்கிறது. ஆனால், சொல்ல வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது. புதுவை மாநிலத்தினை பசுமை மாநிலமாக மாற்ற மாணவர்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டும். அனைவரும் மரம் நடுவதை தங்களது வழக்கமாக வைத்திருக்க வேண்டும் இவ்வாறாக தெரிவித்துள்ளார்.