மாநில அரசு ஊழியர்கள் & ஓய்வூதியர்களுக்கு 11% DA உயர்வு – அரசு அறிவிப்பு!
குஜராத் மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை 11 % உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட DA தொகைக்கு இணையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
DA உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 3 தவணைகளாக நிறுத்தப்பட்டிருந்த அகவிலைப்படி (DA)) தொகையை கடந்த ஜூலை மாத தவணையுடன் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்துவதாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் மஹாராஷ்டிரா அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை 28% அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
CISCE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் – முக்கிய அறிவிப்பு!
இதை தொடர்ந்து குஜராத் மாநில அரசும், ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளத்தில் இருந்து DA உயர்வை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதன் கீழ் ஜூலை மாத நிலுவைத் தொகை அக்டோபர் மாதத்திலும், அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்திலும் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குஜராத் துணை முதல்வர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு ஊழியர்களுக்கான புதிய DA விகிதம் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 11 சதவிகிதம் உயர்த்தப்படும்.
ஆப்கானில் பதவியேற்கும் புதிய அரசு – 6 நாடுகளுக்கு அழைப்பு விடுத்த தாலிபான்கள்!
இது மத்திய அரசு ஊழியர்களின் DA உயர்வுக்கு இணையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த உயர்வு மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடைய உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, உத்தரப்பிரதேசம், பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அசாம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு DA உயர்வை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.