இரவு ஊரடங்கில் மேலும் ஒரு மணி நேரம் தளர்வு – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோன தொற்று பரவல் குறைந்து வருவதால் அங்கு இரவு நேர ஊரடங்கில் கூடுதலாக ஒரு மணி நேரம் தளர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படிம் நேற்று மட்டும் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 17,09,457 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிய பலி ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மாநிலத்தில் 22,861 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலத்தில் மொத்தம் 227 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர். மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்கள் & ஓய்வூதியர்களுக்கு 11% DA உயர்வு – அரசு அறிவிப்பு!
இதுவரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இருந்த ஊரடங்கு கட்டுப்பாடு, இன்று ( செப்டம்பர் 7) முதல் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை குறைக்கப்பட்டுள்ளதாக இன்று கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி அறிவித்துள்ளார். மாநிலத்தில் முகமூடி அணிவது, சானிடைசர்களைப் பயன்படுத்துவது மற்றும் சமூக இடைவெளியைப் பராமரித்தல் போன்ற கொரோனா வைரஸ் நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- சந்தைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மக்கள் நடமாட்டம் அனுமதிக்கப்படுகிறது.
CISCE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் – முக்கிய அறிவிப்பு!
- மால்கள், உணவகங்கள் மற்றும் பார்கள் 50 சதவீத நபர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
- திரையரங்குகள் அதிகபட்சமாக 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட வேண்டும்.
- நீச்சல் குளங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.