இந்திய நிறுவனங்களில் முடிவுக்கு வரும் WFH? ஹைபிரிட் முறைக்கு 70% பேர் தயார்! ஆய்வு அறிக்கை தகவல்!

0
இந்திய நிறுவனங்களில் முடிவுக்கு வரும் WFH? ஹைபிரிட் முறைக்கு 70% பேர் தயார்! ஆய்வு அறிக்கை தகவல்!
இந்திய நிறுவனங்களில் முடிவுக்கு வரும் WFH? ஹைபிரிட் முறைக்கு 70% பேர் தயார்! ஆய்வு அறிக்கை தகவல்!
இந்திய நிறுவனங்களில் முடிவுக்கு வரும் WFH? ஹைபிரிட் முறைக்கு 70% பேர் தயார்! ஆய்வு அறிக்கை தகவல்!

இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை முடித்துக் கொள்வதால் பெரும்பாலான ஊழியர்கள் கலப்பின வேலைகளை விரும்புவதாக ஆய்வு அறிக்கைகள் தகவல் அளித்துள்ளது.

கலப்பின வேலை:

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வந்த சூழலுக்கு மத்தியில் முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைத்து வருகின்றன. இருப்பினும் சில நிறுவனங்கள் ஹைபிரிட் என்ற வேலை முறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. இது தொடர்பான ஆய்வு அறிக்கையின்படி, டிஜிட்டல் துறைகளில் பணிபுரியும் 70%க்கும் அதிகமான பணியாளர்கள் ரிமோட் மற்றும் ஆன்-சைட் ஒர்க் மாடல்களின் கலவையை விரும்புவதாகவும், 25% பேர் முற்றிலும் தொலைதூர வேலையை தேர்ந்தெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

அதாவது தொழில்துறை லாபி NASSCOM மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) அளித்துள்ள அறிக்கையின்படி, சுமார் 5% தொழில்நுட்ப ஊழியர்கள் மட்டுமே பணியிடங்களுக்கு திரும்ப தயாராக இருப்பதாக தெரிகிறது. மற்றபடி, 80%க்கும் அதிகமான IT நிறுவனங்கள் மற்றும் GCCகள் மற்ற தொழில் பிரிவுகளுடன் ஒப்பிடும் போது ஒரு கலப்பின வேலை மாதிரியை ஏற்றுக்கொள்வதாக கணக்கெடுப்பு கூறுகிறது. இப்போது அலுவலக ஊழியர்களுக்கு ஒரு தேர்வு கொடுக்கப்பட்டால், டிஜிட்டல் துறைகளில் பணிபுரியும் 70%க்கும் அதிகமானவர்கள் ரிமோட் மற்றும் ஆன்-சைட் உள்ளிட்ட ஹைப்ரிட் மாடல்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிகிறது.

Exams Daily Mobile App Download

இந்த தரவுகள் 75 பொது நிறுவன பங்குதாரர்களின் ஆய்வறிக்கையை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அலுவலகங்களை மீண்டும் திறக்கும் இந்த நேரத்தில், ஹைப்ரிட் வேலை என்பது ஒரு நெகிழ்வான அணுகுமுறையாகத் தெரிகிறது. இது ஊழியர்கள் தங்கள் நேரத்தை அலுவலகத்தில் வேலை செய்வதற்கும், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் இடையில் சில நெகிழ்வுத் தன்மையை அனுமதிக்கிறது. மேலும் புதிய வேலை மாதிரிகளில் தொழிலாளர்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்களை உள்ளடக்கிய ஊழியர்கள், ஊதியத்தின் தேவைக்கேற்ப அதிகமாக ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று NASSCOM கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!