தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% சம்பள உயர்வு – புத்தாண்டு முதல் அமல்! கூட்டுறவுத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் பண்டக சாலைகளில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கூட்டுறவுத் துறையின் பணியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
புத்தாண்டு முதல் அமல்:
அரசு கூட்டுறவு ஊழியர்களுக்கு ஊதிய நிர்ணயம் 2016 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊதிய நிர்ணயம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும். அதேபோல் தற்போது 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ஊதிய உயர்வு 7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு வழங்க உள்ளது. இந்த புதிய ஊதிய நிர்ணயம் நாளை அதாவது ஜனவரி 1 ஆம் தேதி முதல் முதல் அமலுக்கு வருகிறது.
தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில் ரேஷன் கடைகள், சிறிய பல்பொருள் அங்காடிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பணிபுரியும் எழுத்தர், பண்டகசாலை செயலர், கணக்கர், காசாளர் உள்ளிட்டோருக்கு கூட்டுறவுத்துறை ஊதியத்தை அதிகரித்து வழங்க உள்ளது. சமீபத்தில் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று பணியாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக தனிக்குழு அமைத்து பரிந்துரைக்கப்பட்டு வந்தது.
இன்று மாலை 6 மணி முதல் ஜன.1 காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்த தனிக்குழுவின் கோரிக்கையை ஏற்று ஊதியத்தை அதிகரிக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது. அதேபோல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 7 சதவீதமும், தொடர்ந்து நஷ்டத்தில் செயல்படும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 3 சதவீதமும், நஷ்டத்தில் செயல்பட்டு 2021 ஆம் ஆண்டில் லாபம் பெற்ற சங்கங்களுக்கு 5 சதவீதமும் சம்பளத்தை அதிகம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வீட்டு வாடகைப் படி, பயணப்படி, மருத்துவப்படி, போன்றவைக்கு அளிக்கப்பட்டுள்ளது.