ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – 2ம் வகுப்பு பெட்டிகளுக்கு முன்பதிவு ரத்து! தெற்கு ரயில்வே திட்டம்!

0
ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு - 2ம் வகுப்பு பெட்டிகளுக்கு முன்பதிவு ரத்து! தெற்கு ரயில்வே திட்டம்!
ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு - 2ம் வகுப்பு பெட்டிகளுக்கு முன்பதிவு ரத்து! தெற்கு ரயில்வே திட்டம்!
ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – 2ம் வகுப்பு பெட்டிகளுக்கு முன்பதிவு ரத்து! தெற்கு ரயில்வே திட்டம்!

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலன் கருதி 2ம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் வகையில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

முன்பதிவு ரத்து:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால் பொதுப் போக்குவரத்துகளான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் மட்டும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் கடந்த சில மாதங்களாக ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டன. எனினும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலம் மட்டுமே பயணம் மேற்கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இன்று மாலை 6 மணி முதல் ஜன.1 காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

அதனை தொடர்ந்து ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனாவிற்கு முன்பு வழக்கத்தில் இருந்த உணவு வழங்குதல் தண்ணீர் வழங்குதல் உள்ளிட்டவைகளை மீண்டும் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் தொற்று பரவல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் 2ம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் விதமாக அறிவிக்குமாறு ரயில்வே துறையிடம் பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் அவர்களது கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே 2ம் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை மறுநாள் ஜன.2ம் தேதி முதல் 39 ரயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய முடியும். அந்த வகையில் மங்களூர் – நாகர்கோவில் இடையேயான ரயில்களில் ஜன.4ம் தேதி முதலும், சென்னை – கோவை இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் ஜன.14ம் தேதி முதலும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!