இன்று மாலை 6 மணி முதல் ஜன.1 காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ள அரசாங்கம் இன்று (டிச.31) மாலை 6 மணி முதல் நாளை (ஜனவரி 1) காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
ஊரடங்கு அமல்
இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் தொற்று கண்டறியப்பட்ட கர்நாடகா மாநிலத்தில் தற்போது இந்த நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதிய பாதிப்புகளை பதிவு செய்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் ஒமிக்ரான் மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு, பெங்களூரு நகர ஆணையரின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை உத்தரவு திருத்தப்பட்ட நேரங்களுடன் தொடரும் என்று கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெங்களூரு சிட்டி கமிஷனரேட் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு திருத்தப்பட்ட நேரங்களுடன் தொடரும். அந்த வகையில் டிசம்பர் 31 மாலை 6 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PF நாமினேஷன் முதல் விலைவாசி உயர்வு வரை – 2022 ஜன.1ம் தேதி வரப்போகும் 10 முக்கிய மாற்றங்கள்!
இருப்பினும், குடியிருப்பு வளாகங்கள் மற்றும் தனியார் கிளப்புகளில் உள்ள வீட்டுக் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. தவிர இந்த கொண்டாட்டங்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக நடத்தப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹோட்டல்கள், மால்கள், உணவகங்கள், கிளப்புகள் ஆகியவற்றில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யக்கூடாது என்றும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி இந்த இடங்களில் வழக்கமான வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.