தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தற்போது 6 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கொரோனா பரவலுக்கு பின்பாக தற்போது கடந்த மாதத்தில் இருந்து தான் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கடுமையாக பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி அவ்வப்போது தமிழக அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறையை அளித்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் நிலையினை பொறுத்து மாவட்டங்களில் ஆட்சியர்கள் விடுமுறையினை அளித்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.5000 ரொக்கம் – அரசுக்கு கோரிக்கை!
இனி வரும் நாட்களில் கனமழை மிக அதிகமாக பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதலாக, நாளை (29/11/2021) 6 மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தற்போது வரை 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு செல்வமகள் திட்டம் – ரூ.50,000 வரை பெறலாம்!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெற்றோர்கள் இதனை கருத்தில் கொண்டு நாளை பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.