தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.5000 ரொக்கம் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பொங்கல் பரிசு ரூ.5,000:
தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போல் பொங்கல் தொகுப்போடு சேர்த்து பொங்கல் பரிசுத் தொகையும் வழங்குமாறு பல்வேறு தரப்பினர் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் அரசிடம் கோரிக்கை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் நலிவடைந்த தொழில் நிறுவனங்களை மறுசீரமைக்கும் விதமாக தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதாவது கோவையில் நூற்பாலை, நெசவுத்தொழில், பவுண்டரிகள், பம்ப்செட், நகை வடிவமைத்தல் உள்ளிட்ட சிறு, குறு நிறுவனங்கள் நலிவடைந்துள்ளன. அவைகளை மறுசீரமைக்கும் விதமாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காதலை சொல்லும் எழில், அதிர்ச்சியில் உறைந்து போன அம்ரிதா – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!
கோவையின் தொழில் வளத்தை பெருக்கும் வகையில் 8 வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புடன் ஏழ்மையான குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் மற்ற குடும்பத்தினருக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இத்தகைய கோரிக்கை மக்கள் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.