மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – கொரோனா சிகிச்சை!
கொரோனா பரவலின் முதலாவது அலையின் போது அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு என்பதை மத்திய அரசு அறிவித்தது. தற்போது 3வது அலையின் போதும் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு தற்செயல் விடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறப்பு விடுமுறை
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் பரவல் காரணமாக வேகமாக பரவி வந்தது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலையில் தினமும் ரூ. 797 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஆனால் கொரோனா பரவலின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்தது. தற்போது 3ம் அலையில் மத்திய அரசு நேரடியாக எந்தவொரு ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தவில்லை. தொற்று பரவலை பொறுத்து அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு தற்செயல் விடுப்பு பற்றி தற்போது மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
பிப். 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
இந்த அறிவிப்பில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விடுப்பு முடிந்த பிறகு அலுவலகத்திற்கு திரும்பும் பணியாளர்கள் கொரோனா சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ அறிக்கையின் நகல் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்ததற்கான வட்டார மருத்துவரின் சான்றிதழை தங்கள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு தனது அறிவிப்பில் கூறியுள்ளது.