அண்ணா பல்கலையில் தினமும் ரூ. 797 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள நுழைவுத் தேர்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டும் வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலைவாய்ப்புகளை அளிக்க முன் வந்துள்ளது. அந்த வகையில் தற்போது TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. விரைவில் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் வகையில் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர் மற்றும் நிர்வாக காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிப். 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
அந்த வகையில் கடந்த மாதம் Project Associate II Project Associate – I, Professional Assistant III போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது நுழைவுத் தேர்வு மையத்தில் காலியாக உள்ள Professional Assistant -1 பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பட்டு வருகிறது. இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொறியியல் துறையில் சிஎஸ்சி, ஐடி பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் முடித்திருக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கை!
மேலும் HTMLS, JQuery, Javascript, CSS, AJAX, Angular JS, Oracle SQL பேன்றவற்றில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுடையோர் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தகுதியுடையோர் தங்களின் விவரங்களையும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து the Director, Centre for Entrance Examinations, Anna University, Chennai – 600 025 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.