தமிழகத்தில் 650+ கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம் – தலைமை ஆசிரியர்கள் எடுத்த முக்கிய முடிவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆசிரியர்கள் பணி நியமனம்
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளிகளில் திருச்சியில் உள்ள சையத் முதர்ஷா பள்ளியில் மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அத்துடன் புதிய நிர்வாகிகளுக்கான பொறுப்பேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
TNUSRB காவலர் தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பாக தற்போது கணினி அறிவியல் பாடம் பயிலும் மாணவர்களுக்கு கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இதனால் பல மாணவர்கள் பள்ளி படிப்பை விட்டுள்ளனர். அதனால் இடைநிற்றலை குறைக்கும் வகையில் கணினி அறிவியல் பாடம் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான பட்டியலில் கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் இடம்பெறாமல் இருக்கின்றனர். இனி வரும் காலங்களில் அவர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற வேண்டும். அத்துடன் தமிழகத்தில் இருக்கும் மாநகராட்சி கள்ளர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரிந்து வரும் கணினி பயிற்றுனர்களுக்கு நிலை 1 பதவி உயர்வு வழங்க வேண்டும். மேலும் முக்கியமாக கடந்த 2013ம் ஆண்டு 652 கணினி பயிற்றுனர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தந்து பணியில் நியமிக்க வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.