TNUSRB காவலர் தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணி தேர்வுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 40% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே காவலராக முடியும், இல்லையெனில் அடுத்த சுற்றுக்கு போக முடியாது என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
காவலர் தேர்வு
அரசு வேலையில் நுழைந்துவிட வேண்டும் என்பது தான் பல இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. தமிழக அரசு எப்போது தேர்வினை அறிவிப்பார்கள் என பலரும் காத்து கொண்டிருக்கின்றனர். தமிழக காவல்துறையில் பல காலியிடங்கள் இருப்பதால் காவலர் பணியிடங்களுக்கான விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த தேர்வு நடத்தி காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மீண்டும் பள்ளிகள் திறப்பு!
காவலர் பணிக்கான தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. ஆரம்பத்தில் விருப்ப மொழி பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ் மொழி காவலர் தேர்வில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளிலும் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித்தாள் மட்டுமே தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் தாள் தமிழ் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இந்த முதல் தாளில் குறைந்தது 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். காவலர் தேர்விற்கான இரண்டாம் தாள் வழக்கம் போல 50 பொது அறிவு வினாக்களும், 30 உளவியல் பிரிவு வினாக்களும் இடம்பெறும். முதல் தாளில் 40 மதிப்பெண் பெறவில்லையெனில் இரண்டாம் தாள் திருத்தப்படமாட்டாது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.